சர்வதேச சந்தையில் நிலவும் சாதகமான சூழல் மற்றும் அன்னிய முதலீட்டாளர்களின் வருகையால், நேற்று இந்திய பங்கு சந்தை சற்று உற்சாகமாக வர்த்தகமானது. சென்செக்ஸ் 504 புள்ளிகள் உயர்ந்து, 78,493 என்ற அளவிலும்; நிப்டி 156 புள்ளிகள் அதிகரித்து, 24,353 என்ற அளவிலும் நிறைவடைந்தன. நிப்டி 24,250க்கு மேல் இருப்பது, 24,900 வரை உயர்வதற்கான அறிகுறியாகும்; எனினும், 24,400 புள்ளிகளில் வலுவான தடை இருப்பதால், முதலீட்டாளர்கள் கவனத்துடன் செயல்படுவது அவசியம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஏற்றத்துக்கான காரணங்கள்
1. இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்தம்; அமெரிக்கா – ஈரான் நாடுகளுக்கு இடையிலான பேச்சு
2. கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலருக்கும் கீழ் நீடிப்பது
3. நீண்ட இடைவெளிக்கு பின், அன்னிய முதலீட்டாளர்கள் மீண்டும் பங்குகளை வாங்க துவங்கியுள்ளது
4. அமெரிக்காவின் ‘எஸ் அண்டு பி 500’ மற்றும் ‘நாஸ்டாக்’ குறியீடுகள் புதிய உச்சம் தொட்டது
5. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்தது.
