IPL 2027 – கே.எல்.ராகுலை அவமானப்படுத்திய டெல்லி கேபிடல்ஸ்: காரணம் இதுதான், இப்டியா பண்றது? – delhi capitals not respected kl rahul ahead ipl 2027

ஐபிஎல் 2025, 2026 சீசனில், டெல்லி கேபிடல்ஸை, அக்சர் படேல்தான் வழிநடத்தினார். முதலில், கே.எல்.ராகுலுக்குதான் கேப்டன் பதவியை கொடுப்பதாக இருந்தது. இதனால்தான், இவரை டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம், 14 கோடிக்கு வாங்கியது.

ஆனால், என்னால் கேப்டனாக செயல்பட முடியாது என கே.எல்.ராகுல் மறுத்துவிட்டார். இந்நிலையில், ஐபிஎல் 2025 சீசனில், அக்சர் படேல் கேப்டன்ஸியில், 7 வெற்றிகளையும், 6 தோல்விகளையும் டெல்லி கேபிடல்ஸ் பெற்றது. ஒரு போட்டியில், முடிவை எட்ட முடியவில்லை. இறுதியில், 5ஆவது இடத்தை பிடித்து, பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை.

அடுத்து, ஐபிஎல் 2026 சீசனிலும் கூட, டெல்லி கேபிடல்ஸ் அணி, 14 புள்ளிகளை பெற்று 6ஆவது இடத்தைதான் பிடித்தது. இதனால், அக்சர் படேலின் கேப்டன்ஸி மீது கடும் அதிருப்தியில் இருக்கும் டெல்லி கேபிடல்ஸ் நிர்வாகம், கே.எல்.ராகுலை தொடர்புகொண்டு ஐபிஎல் 2027 சீசனுக்கு நீங்கள்தான் கேப்டனாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது. ஆனால், கே.எல்.ராகுல் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

இந்நிலையில், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியில் இருந்து வெளியேறவுள்ள ரிஷப் பந்தை, டிரேடிங்கில் வாங்கி, கேப்டனாக நியமிக்க டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. லக்னோ அணிக்கு அக்சர் படேலை அனுப்ப டெல்லி முடிவு செய்த நிலையில், இதற்கு அக்சர் ஒப்புக்கொள்ளவில்லை. இந்நிலையில், குல்தீப் யாதவை அனுப்ப டெல்லி முடிவு செய்து, பேச்சு வார்த்தை இறுதிக் கட்டத்தில் இருக்கிறதாம்.

கே.எல்.ராகுல் கோரிக்கை: இந்த விஷயம் அறிந்து, டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகத்தை தொடர்புகொண்ட கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் கேப்டனாக இருந்தால், யார் விக்கெட் கீப்பராக இருப்பார் எனக் கேட்டிருக்கிறார். அதற்கு, பதில் அளித்த டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம், ‘‘ரிஷப் பந்த்தான் விக்கெட் கீப்பராக இருப்பார். இஷ்டம் இருந்தால் அணியில் இருங்கள், இல்லையென்றால் கிளம்பலாம்’’ என ஓபனாக தெரிவித்துவிட்டதாம்.

இதனால், கே.எல்.ராகுல் தற்போது கடும் அதிருப்தியில் இருக்கிறாராம். கே.எல்.ராகுலுக்கு தற்போது 34 வயதாகிறது. இதனால், அவருக்கான மனவு முன்புபோல் இல்லை. மேலும், டி20 பார்மெட்டிலும், கே.எல்.ராகுலால் பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. இதனால்தான், ராகுலை கழற்றிவிட டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாம். மேலும், கேப்டனாக செயல்பட முடியாது என ராகுல் தெரிவித்ததாலும்தான், டெல்லி கேபிடல்ஸ் நிர்வாகம் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் கே.எல்.ராகுலால் செல்ல முடியாத நிலைமை இருக்கிறது. இனி, நீண்ட காலத்திற்கு கேப்டனாக இருக்க கூடிய வீரருக்குதான் கேப்டன் பதவியை தர முடியும் என முடிவு செய்து, ரிங்கு சிங்கை கேப்டனாக நியமிக்க முடிவு செய்துள்ளனர். இதனால், கே.எல்.ராகுலுக்கு, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு செல்வதை தவிர வேறு வழியில்லை எனக் கருதப்படுகிறது. இதனால், டிரேடிங்கில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, ராகுல் செல்லதான் அதிக வாய்ப்பு இருக்கிறதாம்.

Source link