இதுகுறித்து தகவல் அறிந்த ஆந்திர கல்வித் துறை அமைச்சர் நாரா லோகேஷ், ஹைதராபாத்தில் அக்குழந்தை கிசிச்சை பெறும் மருத்துவமனைக்கு சென்றார். குழந்தையின் பெற்றோரை நலம் விசாரித்த அவர், மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார்.
பிறகு ரூ.6 கோடியை தானே வழங்குவதாக உறுதி அளித்தார். இதையடுத்து வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட ஊசி மருந்தை நேற்று அவர் நேரில் வழங்கினார். அந்த ஊசி புனர்விகா க்கு செலுத்தப்பட்டது. அப்போதுகுழந்தையின் பெற்றோர் அவருக்கு நன்றி தெரிவித்தனர். பிறகு ‘எக்ஸ்’ தளத்தில் “குழந்தை புனர்விகா நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்” என அமைச்சர் லோகேஷ் பதிவிட்டுள்ளார்.
