மகளிர் இட ஒதுக்கீடு மசோதா: அனைத்து எம்.பி.க்களிடமும் கடைசி நேர ஆதரவு கோரிய பிரதமர்

புதுடெல்லி: மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஆதரவு அளிக்குமாறு அனைத்து எம்.பிக்களுக்கும் கடைசி நேர வேண்டுகோளை முன்வைத்துள்ளார் பிரதமர் மோடி.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை திருத்துவது குறித்த விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றிரவு 1 மணி வரையில் இந்த விவாதம் தொடர்ந்து நடைபெற்றது. தவறான புரிதல்களை நீக்கும் வகையில் தர்க்க ரீதியிலான பதில்கள் வழங்கப்பட்டுள்ளன. எழுப்பப்பட்ட ஒவ்வொரு கேள்விக்கும் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்ட கூடுதல் தகவல்களும் அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. எவருடைய மனதிலாவது எதிர்ப்பை ஏற்படுத்தக்கூடிய சிக்கல்கள் இருப்பின் அவையும் தீர்க்கப்பட்டுள்ளன.

நாட்டில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு விவகாரத்தைச் சுற்றி கடந்த 40 ஆண்டுகளாக பெருமளவிலான அரசியல் விளையாட்டுக்கள் அரங்கேறி வந்துள்ளன. நாட்டின் மக்கள் தொகையில் சரி பாதியாக உள்ள பெண்களுக்கு அவர்களுக்கான உரிமைகள் நிச்சயம் கிடைக்க வேண்டிய தருணம் இதுவே ஆகும்.

Source link