இங்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், உருது மொழி பேசும் மக்கள் வசிக்கின்றனர். கிருஷ்ணகிரி நகராட்சி, காவேரிப்பட்டணம் பேரூராட்சி, கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 40 ஊராட்சிகள் இத் தொகுதியில் உள்ளடங்கியுள்ளன.
இத்தொகுதியில் வன்னியர், வெள்ளாள கவுண்டர், பட்டியலின மக்கள் அதிகளவில் உள்ளனர். இதேபோல இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களும் பரவலாக உள்ளனர்.
தொகுதியில் நிலவும் பிரச்சினைகள்
மாவட்டத்தின் தலைநகராக கிருஷ்ணகிரி நகரம் இருந்தாலும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் பின்தங்கியுள்ளன. குறிப்பாக, பாதுகாப்பான குடிநீர், பொது கழிப்பறை வசதிகள் இல்லை. நகரில் காய்கறி சந்தைக்கு தனி இடம் வேண்டும். கிருஷ்ணகிரியில் அரசு சட்டக்கல்லூரி ஏற்படுத்த வேண்டும்.
காவேரிப்பட்டணத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண் டும் என்பன பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க சுத்திகரிப்பு நிலையம், எண்ணேகொல்புதூர் கால்வாய் திட்டப்பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
